பேசாலை பங்கை சேர்ந்த 55 மாணவ மாணவியருக்கான “முதல்நன்மை” வழங்கும் நிகழ்வு இன்று காலை 6.30 மணிக்கு இடம் பெற்ற திருப்பலியின் போது இடம் பெற்றது. மறைக்கல்வி ஆசிரியர்களின் மூன்றுமாத கால முன் ஆயத்தங்களைத் தொடர்ந்துஇ மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்.பணி எம். ஜெயபாலன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற கூட்டுத்திருப்பலியின் போது இச்சிறுவர்களுக்கான இத்திருவருட்சாதனம் முதன் முதலாக வழங்கப்பட்டது. திருப்பலியின் போது பங்குத்தந்தை அருட் பணி விக்ரன் அவிதப்பர்இ உதவி பங்குத்தந்தை அருட் பணி டெஸ்மன் [...]
Read Moreபேசாலை பாடசாலை மாணவனின் பரிதாப மரணம் – இரண்டாவது இணைப்பு -
பேசாலை புனித பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 6ல் கல்வி கற்று வந்த உதயகுமார் நிதன் எனும் 12 வயது மாணவன் பாடசாலை முடிந்து தனது வீட்டிற்கு திரும்பியபோது பாவிலுப்பட்டங்கட்டி குடியிருப்பு பஸ் தரிப்பிடத்தில் பஸ் வண்டியிலிருந்து இறங்கி தனது கிராமமான கவ்வயங் குடியிருப்பு கிராமத்திற்கு செல்ல முற்ப்பட்டவேளை பின்னால் மிக வேகமாக வந்த பிக்கப் வாகனத்தினால் மோதுண்டு பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமானார்;. இது தொடர்பான விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்;.பிக்கப் [...]
Read Moreமுன்பள்ளி வருடாந்த விளையாட்டு போட்டி
பேசாலை அமலதாசன் முன்பள்ளி சிறுவர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டிஇன்று மாலை மூன்று மணி தொடக்கம் பேசாலை புனித லூட்ஸ் கெபி வளாகத்தில் நடை பெற்று வருகின்றது. பெருவாரியான பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்விற்கு கீழியங்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பண.p மரியதாசன் லியோண் அடிகளார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். கல்வித் திணைக்களத்தின் சார்பாக திரு.L.R.குருஸ் (AD) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சிறுவர்களின் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளோடு கலையம்ஸமான சிறப்பு நிகழ்வுகளும் கலந்த இந்நிகழ்வு சுமுகமாக நடைபெற்று வருகின்றது. [தகவல்: [...]
Read Moreமன்னார் பேசாலை நடுக்குடாப் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் 12 வயது மாணவன் பலி _
மன்னார் -தலை மன்னார் பிரதான வீதி பேசாலை-நடுக்குடாப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் 12 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பேசாலை பற்றிமா மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த உதயகுமார் ரிதன்(வயது-12) என்ற மாணவனே உயிரிழந்தவனாவார். பேசாலை பற்றிமா பாடசாலை முடிந்து தனியார் பஸ் ஒன்றில் நடுக்குடா சென்று பின் வீடு செல்வதற்காக மாணவன் வீதியைக் கடக்க முற்பட்ட போது [...]
Read More“ உருகுதே ” இறுவெட்டு வெளியீடு
பேசாலைக் கிராமத்தின் நூற்றாண்டு கால வரலாற்றையும் கடந்து பெருமையாக திகழும் ஓர் அம்ஸம் “உடக்கு பாஸ்” என்பதாகும். இம்மண்ணின் முன்னோர்கள் அடுத்த தலைமுறை சந்ததியினருக்கென விட்டுச்சென்ற மாபெரும் சொத்தாகிய இப்படைப்பு தலைமுறை கடந்தும் தொடர்தும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வாண்டுக்கான தவக்கால நிகழ்வின் உச்சமாக பெரிய வெள்ளியன்று காண்பிக்கப்பட்ட 7ம் 8ம் 9ம் பாஸ் காட்சிகளின் தொகுப்பினை “உருகுதே” எனும் தலைப்பில் ஓர் இறுவெட்டாக Pesalai Media Organization எனும் அமைப்பு இன்று வெளியீடு; செய்தது. இந்நிகழ்வானது இன்று [...]
Read Moreசென் மேரீஸ் மகளீர் வித்தியாலயத்தில் பகிஸ்கரிப்பு போராட்டம்
மன்னார் தீவின் நடுநாயகமாக திகழும் பேசாலைக் கிராமத்தில் சிறப்பாக செயற்பட்டு வந்த சென் மேரீஸ் மகளீர் வித்தியாலயத்தில் கடந்த பல மாதங்களாக அதிபர் இல்லாமை ஆசிரியர்கள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது. இது தொடர்பாக கல்வி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் பேசாலைச் சமூகம் பல முறை பேசிப்பார்த்தும் எதுவித தீர்வுகளும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று 05.07.2012 பாடசாலை மாணவர்களும் இவர்களின் பெற்றோரும் இணைந்து பாடசாலை பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினர்.இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்விற்கு [...]
Read More- 1
- 2
உங்களுடைய வாழ்த்து செய்திகள், விளம்பரம் போன்றவற்றை குறிப்பிடப்பட்ட கட்டணத்துடன் பிரசுரிக்கலாம். தொடர்புகளுக்கு info@Pesalai.com
உங்களுடைய வாழ்த்து செய்திகள், விளம்பரம் போன்றவற்றை குறிப்பிடப்பட்ட கட்டணத்துடன் பிரசுரிக்கலாம். தொடர்புகளுக்கு info@Pesalai.com
உங்களுடைய வாழ்த்து செய்திகள், விளம்பரம் போன்றவற்றை குறிப்பிடப்பட்ட கட்டணத்துடன் பிரசுரிக்கலாம். தொடர்புகளுக்கு info@Pesalai.com




